பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்க முகாம்

பட்டுக்கோட்டை, மார்ச் 21: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்க முகாம் நடந்தது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடந்த செயல்விளக்க நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை ஆர்டிஓ பூங்கோதை தலைமை வகித்தார். முன்னதாக அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது ஜனநாயக கடமை என வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம், தேர்தல் துணை தாசில்தார் தெய்வானை மற்றும் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் கருப்பையன், நகராட்சி தேர்தல் பிரிவு அலுவலர் முருகேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: