பைக்குகள் மீது டிராக்டர் மோதல் 3 பேர் படுகாயம்

திருவையாறு, மார்ச் 21: திருவையாறு அருகே 2 பைக்குகளின் மீது டிராக்டர் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். திருவையாறு அடுத்த கீழத்திருப்பந்துருத்தியை சேர்ந்தவர் ராஜா மணைவி சசிகலா (40), அவரது மகன் அஸ்வின் (15). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். ஏலாக்குறிச்சி காட்டூரை சேர்ந்த சின்னத்துரை மகன் குமரேசன் (27) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றார். திருவையாறு- விளாங்குடி சாலை அய்யனார்கோவில் தெரு மெயின்ரோட்டில் 2 வாகனங்களின் மீதும் அந்த வழியாக வந்த டிராக்டர் மோதியது. இதில் சசிகலா, அஸ்வின், குமரேசன் ஆகியோர் படுகாயமடைந்தனர். திருவையாறு போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: