புழல், மார்ச் 21:திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை ஆளுங்கட்சியினர் புறக்கணிப்பதாக புகார் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும், அடுத்த மாதம் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. இந்நிலையில், பல்வேறு தொகுதிகளில் கூட்டணி கட்சியினரை ஆளுங்கட்சி புறக்கணித்து வருவதாக புலம்பி வருகின்றனர்.