பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர்,மார்ச் 21: பாராளுமன்ற தேர்தலில் பாதுகாப்புப்பணியில் சேர தகுதி யான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளில் முன்னாள் படைவீரர்களை அதிகளவில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே,  பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 65வயதிற்குட்பட்ட நல்ல உடல்திறனுள்ள அடை யாளஅட்டை பெற்றுள்ள முன்னாள் இளநிலை படைஅலுவலர்கள், முன்னாள் படை வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் தங்களது அடையாளஅட் டை மற்றும் வாக்காளர்அட்டையுடன், உதவிஇயக்குநர், முன்னாள் படைவீரர்நல அலு வலகம், 72ஏ, புதிய மார்க்கெட்தெரு, அரியலூர்621704 என்பவரை நேரில்அணுகவும்.  மேலும் விவரங்களுக்கு 04329-221011 என்றத் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர்  தெரிவித்துள்ளார்.

Related Stories: