பெரம்பலூர்,மார்ச் 20: பிளஸ்-2 பொது த்தேர்வு எழுதிமுடித்த மாணவர்கள் உற்சாகத்தைக் கொண்டாட கும்பலாக விசுவக்குடி அணைக்கட்டிற்கு குளிக்க ச்சென்ற போது நீச்சல் போட்டி நடத்தியதில் குரும்பலூர் மாணவன் நீரில் மூழ்கி பலியானான். பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூ ராட்சியின் 11வது வார்டு, காமராஜர் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் மோகன், மகேஸ்வரி ஆகியோரது மகன் ஹேமநாதன் (17). பெரம்பலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வின் கடை சிநாளில் பொதுத்தேர்வை ஆர்வமுடன் எழுதி முடித்த ஹேமநாதன் மற்றும் அவ ரோடு படித்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வெழுதி முடித்தவுடன், பள்ளிப் பருவத்தை முடித்ததன் நினைவாக அத னை உற்சாகமாகக் கொண்டாட நினை த்து வேப்பந்தட்டை தாலுகா, விசுவ க்குடி அணைக்கட்டு பகுதியில் குளித்து நீராடி மகிழச் சென்றுள்ளனர். விசுவக்குடி அணைக்கட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழைநீர் மதகுப்பகுதியில் 12அடி உயரத்திற்கும், பரவலாக தற்போது நான்கரை அடி உய ரத்திற்கும் தரையில் சகதியுடன் தேங்கியுள்ளது. இந்த அணைக்கட்டு 2015ம்ஆ ண்டு நவம்பரில் கட்டிமுடித்து 4 ஆண்டு களுக்குள் அங்கு குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள், ஆட்டோ டிரைவர் என 5 பேரை காவு வாங்கி யுள்ளது. இதற்காக சம்மந்த ப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்காமல், யாரும் அணைக்கட்டில் குளிக்கக் கூடாது என்று கண்து டைப்பு க்காக சிறிய பேனர் ஒன்றை மட்டும் வைத்துவிட்டு கண்டுகொள்ளா மல் விட்டுவிட்டனர்.