பாவூர்சத்திரம், மார்ச் 20: கீழப்பாவூர் பேரூராட்சி ஊழியரை தாக்கியவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கீழப்பாவூர் பேரூராட்சியில் குடிநீர் திட்ட உதவியாளராக பணியாற்றி வருபவர் முத்துசாமி (56). பேரூராட்சி நிர்வாக அதிகாரி கண்மணி உத்தரவின்பேரில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளனவா? என்று இவர், பேரூராட்சி ஊழியர் முத்துசாமி, பேரூராட்சி பம்ப் மெக்கானிக் தர்மராஜ், சுகாதார பணியாளர் ராஜன் ஆகியோர் 11வது வார்டு பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது குத்தாலிங்கம் மகன் மகாராஜா என்பவர் வீட்டில் முறைகேடாக மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.