அண்ணாநகர், மார்ச் 20: சென்னை பூந்தமல்லியில் பைக் மீது அரசு பஸ் மோதி பெண் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் மற்றும் மகள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஜாபர் அலி (35). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி பர்சானா (26). இவர்களது மகள் தனிஷா (6), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள்.இவர்கள் 3 பேரும், நேற்று முன்தினம் மாலை பூந்தமல்லியில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டனர். பூந்தமல்லி வேம்புலி அம்மன் கோயில் அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ், பைக் மீது வேகமாக மோதியது. 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஜாபர் அலிக்கு வலது கையில் எலும்பு முறிந்தது. தனிஷாவுக்கு வலது கை, காலில் லேசான காயம் ஏற்பட்டது. பர்சானா பலத்த காயம் அடைந்தார்.