சென்னை, மார்ச் 20: சென்னை பெரம்பூரில் வாக்காளர்களின் அடையாள அட்டை மற்றும் செல்போன் எண்களை பெற்று, பணம் பட்டுவாடா செய்ய முயன்ற அதிமுகவினரை, திமுகவினர் தட்டிக் கேட்டனர். இதனால், ஆத்திரமடைந்த அதிமுகவினர் ஒன்றாக திரண்டு திமுகவினரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.வடசென்னை நாடாளுமன்ற தேர்தலுடன், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடும் ேவட்பாளர்களை அறிவித்து வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.கடந்த முறை ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடும் போது, வாக்காளர்களுடைய அடையாள அட்டை நகல் மற்றும் தொலைேபசி எண் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்டு வீடு வீடாக சென்று பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.அதேபோல் தற்போது பெரம்பூர் சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக அதிமுகவினர் கடந்த ஒரு வாரமாக கொடுங்கையூர் 35 மற்றும் 37 வார்டுகளுக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலை, விேவகானந்தர் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், கண்ணதாசன் நகர், முத்தமிழ் நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் எண்ணையும் பெற்று வருகின்றனர்.இதையறிந்த திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் சல்மான் மற்றும் திமுகவினர் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் நேற்று காலை சென்று, அதிமுகவினரை தடுத்து நிறுத்தி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் டேவிட் ஞானசேகரன், சல்மான் மற்றும் அவருடன் வந்தவர்களை சரமாரியாக தாக்கினார்.