ஸ்ரீபெரும்புதூர், மார்ச் 19: வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்துக்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதையொட்டி, பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பெரும்புதூர் ஒன்றியத்தில் அடங்கிய அனைத்து கட்சியினர் கூட்டம் பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுகவினர் மட்டுமே கலந்து கொண்டனர்.இதில் அதிகாரிகள், மற்ற கட்சிகளுக்கு எவ்வித தகவலும் கொடுக்காமல், அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் தகவல் கொடுத்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சி நிர்வாகிகள் கூறுகையில், பெரும்புதூர் ஒன்றியத்தில் அதிமுக, திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள்கட்சி , மதிமுக, புரட்சி பாரதம், பகுஜன் சமாஜ்வாடி உள்பட பல்வேறு கட்சிகள் உள்ளன. தற்போது தேர்தல் விதிமுறைகள் குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.