தேனி, மார்ச் 15: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நியமிக்கப்பட்டுள்ள பறக்கும்படை, நிலைக்கண்காணிப்புக் குழுவினருக்கு பயிற்சி வகுப்புகள் நேற்று தேனியில் நடந்தது. தேனி நாடாளுமன்றத் தொகுதி பொதுத்தேர்தல், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை ஏப்.18ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த 10ம் தேதி மாலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. இவ்விதிகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக 3 பறக்கும்படை, 3 நிலைக்கண்காணிப்புக்குழு, 2 வீடியோ கண்காணிப்புக்குழு, 1 வீடியோ பார்வையாளர் குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.