காரைக்குடி, மார்ச் 15: பாராளுமன்ற தேர்தலில் கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவித்து பணிகளை துவங்காத நிலையில் அமமுக கட்சியினர் ஆளும்கட்சி அதிருப்தியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவது உள்பட பல பணிகளை துவக்கியுள்ளனர்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் வரும் 19ம் தேதி முதல் துவங்குகிறது. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கூட்டணி அறிவித்து தொகுதிகளின் எண்ணிக்கை மட்டும் அறிவித்துள்ளனர். இன்னும் கூட்டணி கட்சிகளுக்கு போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்பட வில்லை.சிவகங்கை தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படலாம், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இன்னும் தொகுதி முடிவாகாததால் கட்சிகள் தேர்தல் அலுவலகம் திறக்கவில்லை. பணிகளும் மேற்கொள்ளாமல் உள்ளனர்.