வேடசந்தூர் மார்ச் 15: கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் வேடசந்தூரில் நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உள்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி வேடசந்தூர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அன்பழகன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட தேர்தல் துணை அதிகாரி ராமு, வேடசந்தூர் தேர்தல் அதிகாரி சுரேஷ்கண்ணன் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.