திருச்சி, மார்ச் 14: திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் அருகே நேற்றுமுன்தினம் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.