மணல் கடத்திய லாரி பறிமுதல்

ஜெயங்கொண்டம், மார்ச்14: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சுத்தமல்லி காரைக்குடி செல்லும் ரோட்டில் தா.பழூர்  எஸ்ஐ ராஜதுரை தலைமையிலான போலீசார் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை சோதனை செய்த போது அனுமதி பெறாமல் மணல் ஏற்றி வந்த தெரியவந்தது. மணல் கடத்தி வந்த துளாரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்(27), மணிகெதி கிராமத்தை சேர்ந்த தங்கையன் மகன் மணிகண்டன்(20) ஆகிய இருவரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றார்.

Related Stories: