திருப்பூர், மார்ச் 14: திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்களை அதிகாரிகளில் சொந்த வேலைக்கு பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் நெடுஞ்சாலை துறையில் திருப்பூர், தாராபுரம் ஆகிய இரு கோட்டங்கள் உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் வேலை செய்கின்றனர். சாலை பணியாளர்கள் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பழுதுகளை நீக்கி மராமத்துபணிகளை செய்து வந்தனர். ரோட்டின் ஓரங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றுவது, மரக்கன்றுகள் நடுவது உட்பட பல்வேறு பணிகளை செய்து வந்தனர். தற்போது தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட சாலை பணியாளர்கள் உள்ளனர். சாலை பணிகளை செப்பனிட, மராமத்து பணிகள் செய்ய கல் சிப்ஸ், தார், வாகனங்கள், டீசல், சட்டி, தள்ளுவண்டி உட்பட பல்வேறு பொருட்களை இருப்பு வைத்து பணிகள் செய்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டாக சாலை பணியாளர்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் இருப்பு இல்லாததால், காலையில் அலுவலகம் வந்து வருகைபதிவேட்டில் கையெழுத்து இடுகின்றனர்.