சென்னை, மார்ச் 14: சவாரிக்கு சென்ற கால்டாக்சியை கடத்திய மர்மநபரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை, பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (30). கால்டாக்சி டிரைவர். இவரது கால் டாக்சிக்கு பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் இருந்து அரக்கோணம் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு சவாரி பதிவானது. இதையடுத்து சதாம் உசேன், காருடன் அங்கு சென்றார். அப்போது ஒரு வாலிபர், காரில் ஏறி அரக்கோணம் செல்ல வேண்டும் என கூறினார். அதன்படி, கார் அரக்கோணம் நோக்கி புறப்பட்டது. பேரம்பாக்கம் அடுத்த இருளஞ்சேரி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, சாலையோர கடையில் தண்ணீர் வாங்கி வரும்படி டிரைவர் சதாம் உசேனிடம், அந்த வாலிபர் கூறியுள்ளார்.