சென்னை: நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடுமுழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொடங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தேர்தல் நேரத்தில் எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க குற்ற பின்னணி உள்ள நபர்கள், கொலை குற்றவாளிகள், சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.