கைப்பந்தாட்ட போட்டி இயக்குனருக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி, மார்ச் 8:  பர்கூர் கைப்பந்து கழகத்தின் சார்பில், 14வது அகில இந்திய கைப்பந்தாட்ட போட்டி கடந்த மாதம் 25ம் தேதி முதல் தொடங்கி 4ம் தேதியுடன் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக போட்டியை நடத்தி வரும் கைப்பந்தாட்ட கழகத்தின் இயக்குனர் தனபால், உறுதுணையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வாசுகி தனபால் ஆகியோருக்கு பர்கூர் கைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் அசோகன், துணை செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோரது முன்னிலையில் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Related Stories: