உடுமலை, மார்ச் 7:தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், உடுமலை அருகே உள்ள எரிசனம்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க கோரியும், பால் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.பரமசிவம் தலைமை வகித்தார். உடுமலை வட்டார தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். செயலாளர் பாலதெண்டபாணி விளக்க உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் வி.எஸ்.பரமசிவம், கே.முருகவேல், டி.அருண்பிரகாஷ், எம்.மாதவி, எம்.நாகராஜ், கனகராஜ், மதுசூதனன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் லோகேஸ்வரன் நன்றி கூறினார்.