திருவள்ளுவர் அரசு கல்லூரியில் விளையாட்டு விழா

ராசிபுரம், மார்ச் 7: ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு குழு விளையாட்டு போட்டி, தடகள போட்டிகள் நடந்தது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் வெண்ணிலா ஆண்டறிக்கை வாசித்தார். ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயராகவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார். ராசிபுரம் காவல் துறை ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: