தொட்டியம் அருகே குடிசை வீடு தீயில் எரிந்தது

தொட்டியம், மார்ச் 7:  தொட்டியம் அருகே உள்ள வேந்தம்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் ராமன் (55), விவசாயி. இவரது குடிசை வீட்டில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட ராமன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த முசிறி தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள், டி.வி, பீரோ, கட்டில் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கருகி நாசமானது.  இது குறித்து தகவலறிந்த தொட்டியம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் ஆகியோர் ராமனிடம் அரசின் நிவாரண உதவிகளை வழங்கினர்.

Related Stories: