திருத்துறைப்பூண்டி, மார்ச்7: நீதிமன்ற உத்தரவுபடி திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியஆசிரியர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சிக்கனம் சேமிப்பு சங்க தேர்தலுக்கு வேட்புமனுதாக்கல் கடந்த ஆண்டு ஏப்ரல் 9ம்தேதி, 10ம்தேதிபரிசீலனை, 16ம்தேதி தேர்தல் நடைபெறுவதாகஅறிவிக்கப்பட்டிருந்தது.இதில் தமிழகஆரம்பபள்ளிஆசிரியர் கூட்டனியை சேர்ந்த 11 பேரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளிஆசிரியர் கூட்டனியை சேர்ந்த 11 பேரும் வேட்பு மனுதாக்கல் செய்து இருந்தனர்.இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்திரவுபடி அதேநிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.மீண்டும் கடந்த ஆண்டு ஏப்ரல் 23 ந் தேதி வேட்பு மனுபரிசீலனைநடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரிவரவில்லை. இதனை கண்டித்து ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சிக்கனம் சேமிப்பு சங்கம் முன்பு தமிழகஆரம்பபள்ளிஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.