கொடைக்கானல்: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் விதிமீறிய 405 கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி துவங்கியது. கொடைக்கானல் நகராட்சி பகுதியில் அனுமதியற்ற, விதிமீறிய வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் கடந்த 7 நாட்களாக 230 விதிமீறிய வணிக கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது. இதேபோல் கொடைக்கானல் ஊராட்சி பகுதிகளில் அனுமதியற்ற, விதிமீறிய வணிக கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி வில்பட்டி ஊராட்சிக்குப்பட்ட பேத்துப்பாறை, வில்பட்டி, பள்ளப்பட்டி, பெரும்பள்ளம், சின்ன பள்ளம், குறிஞ்சி நகர், குறிஞ்சி ஆண்டவர் கோயில் பின்புறம் உள்ள பகுதிகளில் வணிக பயன்பாட்டில் உள்ள விதிமீறிய 405 கட்டிடங்களுக்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.