அரக்கோணம், மார்ச் 6: அரக்கோணம் அருகே 2 டாஸ்மாக் கடைகளை உடைத்து ₹1.50 லட்சம் பணம், மதுபானத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டையில் வெவ்வேறு தெருவில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் ஒரு கடையில் ரத்தினகிரியை சேர்ந்த பாஸ்கரன் மேற்பார்வையாளராகவும், செம்பேடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ், கைனூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், மற்றொரு கடையில் திருப்பத்தூரை சேர்ந்த விஜயராகவன் என்பவர் மேற்பார்வையாளராகவும், பெருவளையத்தை சேர்ந்த சவுந்தர், சோளிங்கரை சேர்ந்த தனசேகர் ஆகியோர் விற்பனையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் 2 கடையிலும் மது விற்பனையை முடித்துக்கொண்டு கடைகளை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். நேற்று அதிகாலை அரக்கோணம் டவுன் எஸ்ஐ பிரபாகரன் மற்றும் போலீசார் கும்பினிபேட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.