கரூர், மார்ச் 6: கரூர் சுங்ககேட் பகுதியில் தூர் வாராமல் புதர் மண்டிய கழிவுநீர் ஓடையை சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் சுங்ககேட் பகுதியில் கழிவுநீர் ஓடை உள்ளது. இதனை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. சுங்ககேட் மெயின் ரோட்டை கடந்து அமராவதி ஆற்றுப்பகுதிக்கு இந்த ஓடை செல்கிறது. பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கழிவுநீர் ஓடையில் தேங்கி கிடக்கிறது. இதனை தூர்வாரி நீண்ட காலமாகி
விட்டது.