திருச்சி, மார்ச் 1: திருச்சியில் தனியார் லாட்ஜில் ரூம் வாடகைக்கு கேட்ட தகராறில் பூ வியாபாரியை தாக்கிய லாட்ஜ் மேலாளரை போலீசார் கைது செய்தனர். மண்ணச்சநல்லூர் அழகியமணவாளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (36). மத்திய பஸ்நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரின் உறவினர் நேற்றுமுன்தினம் சென்னையில் இருந்து இரவு திருச்சி வந்தார். இவரை தங்க வைப்பதற்காக மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு சுற்றுலா அலுவலகம் எதிரே உள்ள லாட்ஜில் அறை கேட்டார். அறை வாடகை ரூ.2000 ஆகும் என லாட்ஜ் மேலாளர் லால்குடியை சேர்ந்த சந்திரசேகரன் (33) கூறியுள்ளார்.