ஊட்டி, மார்ச் 1: நீலகிாியில் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் குறைந்த நிலையில், விவசாயிகள் மைக்கோர ஸ்பிாிங்லர் மூலம் தண்ணீா் பாய்ச்சி வருகின்றனா்.நீலகிாி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்த சமயத்தில் பெய்தது. அதே சமயம் கடந்த நான்கு மாதங்களாக பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த 3 மாதங்களாக பகலில் வெயிலும், இரவு நேரங்களில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தேயிலை மற்றும் காய்கறி பயிா்கள் கருகின. இதனால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பனிக்காலம் முடியும் தருவாயில், நீலகிாி மாவட்டத்தில் ஓரளவு தண்ணீர் உள்ள பகுதிகளில் மட்டும் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.