ஈரோடு, மார்ச் 1:அரசு பொதுத்தேர்வுகள் துவங்கி உள்ளதால் கோயில் திருவிழாக்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் நடந்து வருகிறது. 15 நாட்களுக்கு மேல் நடக்கும் இந்த திருவிழாக்களில் தினமும் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதற்காக, ஆங்காங்கே கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைக்கப்பட்டு சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. இதனால், பள்ளி மாணவ, மாணவியர் தேர்வுக்கு படிக்க முடியாமல் அவதிக்குள்ளாவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது பிளஸ் 2 தேர்வு துவங்கி உள்ள நிலையில் அதிக சத்தத்துடன் சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்படுவதால் மாணவர்களின் கவனம் சிதறுவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறைக்கு புகார்கள் சென்றது.