பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் உண்ணாவிரதம் பொதுமக்கள் மனு

பாபநாசம், மார்ச் 1: தஞ்சை கலெக்டரிடம் பாபநாசம் சாலியமங்கலம் சாலையை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தார். அதில் பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வாழ்ந்து வரும் நாங்கள் மன உளைச்சலுக்கும், பல்வேறு பிரச்சினைக்கும் ஆளாகி வருகிறோம். இதுதொடர்பாக காவல்துறை, டாஸ்மாக் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும், ஆர்ப்பாட்டம நடத்தியும் டாஸ்மாக் கடையை அகற்றவில்லை. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: