குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் ஏனாதி- பிடாரம்பட்டி சாலை வாகன ஓட்டிகள் அவதி

பொன்னமராவதி, மார்ச் 1: பொன்னமராவதி அருகே ஏனாதி- பிடாரம்பட்டி சாலை போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் குண்டும், குழியுமாக சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பொன்னமராவதி வலையபட்டி அரசு மருத்துவமனை அருகில் இருந்து காயம்புஞ்சை, பிடாரம்பட்டி வழியாக ஏனாதிக்கு செல்லும் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பாதசாரிகள் தினம்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்கவேண்டும். மேலும் குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: