திருச்சி, பிப்.27: மணப்பாறை அருகே தனியார் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 19 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 1997-2000ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி முதல் முறையாக 19 ஆண்டுகள் கழித்து கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதற்காக 23ம் தேதி இரவு கூடிய மாணவர்கள் தாங்கள் தங்கியிருந்த விடுதியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தங்களது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளிநாடு, வெளிமாநிலங்களில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர். இந்நாள், முன்னாள் ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.