திருப்போரூர், பிப்.27: பயன்படுத்தாமல் உள்ள தையூர் மகளிர் சுகாதார வளாகத்மைத, மகளிர் சுய உதவிக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். திருப்போரூர் ஒன்றியம் தையூர் ஊராட்சியில் பொது மக்களின் வசதிக்காக மகளிர் சுகாதார வளாகம் கடந்த 2011 - 2012ம் ஆண்டு புனரமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் நோக்கத்தில், இந்த சுகாதார வளாகம் கட்டும் திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஒவ்வொரு வீடுகளிலும் மான்ய உதவித் திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டவும் நிதியுதவி செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே கழிப்பறையை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டியதால், அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இதனால், பொதுக் கழிப்பறையை பயன்படுத்துவதை மக்கள் நிறுத்தி விட்டனர்.