காரைக்கால், பிப்.27: காரைக்கால் நில அளவைத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை, உடனே சரி செய்யவேண்டும். என, சோஷியல் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா கம்யூனிஸ்ட் (எஸ்.யூ.சி.ஐ) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, காரைக்கால் சோஷியல் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா கம்யூனிஸ்ட் (எஸ்.யூ.சி.ஐ.) செயற்குழு உறுப்பினர் முகம்மது பிலால் கூறியதாவது: காரைக்கால் மாவட்ட நில அளவைத் துறை அலுவலகத்தின் ஒட்டுமொத்த நிர்வாக அலட்சியத்தால், பொதுமக்கள் தினமும் இந்த அலுவலகத்துக்கு சென்று தீர்வு காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், போதிய ஊழியர்கள் இல்லாததால், மக்களின் கோப்புகள் பல மாதங்களாக தேங்கி கிடக்கின்றது.