நாட்றம்பள்ளி, பிப்.27: நாட்றம்பள்ளியில் தனது மகள்களிடம் தவறாக நடக்கும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் கொடுத்த புகாரை போலீசார் ஏற்க மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பேரூராட்சி தாயப்பகவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் அனுராதா(34) கூலிதொழிலாளி, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேஷ் பெயின்டர், இருவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 பெண், 1 ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், மூத்த மகள் 9ம் வகுப்பும், 2வது மகள் 8ம் வகுப்பும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தனது கணவர் இரவு நேரத்தில் மது குடித்துவிட்டு வந்து மகள்களை செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.