உத்தமபாளையம், பிப்.26: உத்தமபாளையம் பேரூராட்சியில் சாலையோரங்களில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் சிறப்பு தூய்மை முகாம் நடைபெற்றது. உத்தமபாளையம் பேரூராட்சியில் 18வார்டுகள் உள்ளன. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து பேரூராட்சிகளிலும் தூய்மை முகாம் நடத்திட உத்தரவிடப்பட்டு இருந்தது. இதன்படி உத்தமபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட உத்தமபாளையம் பிடிஆர் காலனி மாநிலநெடுஞ்சாலை மற்றும் உ.புதூர், களிமேட்டுப்பட்டி சுகாதார வளாகத்தில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், மக்கும், மக்காத குப்பைகள் அகற்றப்பட்டன.