மதுரை, பிப்.26: மதுரை மாவட்டத்தில் நீர்நிலை புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குதலுக்காக மத்திய தேசிய நீர் விருது கலெக்டர் நடராஜனுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் நீர் நிலைகள் புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குவதற்காக மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு தென்மாநிலங்களில் நீர்நிலைகள் புனரமைப்பு பணி மற்றும் புதிதாக உருவாக்கியதற்காக தமிழகத்தில் மதுரை மாவட்டத்திற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. மேலும் நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிக்காக மாவட்டத்திற்கு 3ம் பரிசும் கிடைத்துள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் புதுடெல்லியில் நேற்று நடந்தது. விழாவில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜனுக்கு முதல் பரிசுக்கான விருது மற்றும் சான்றிதழை வழங்கி, பாராட்டு ெதரிவித்தார்.