சாதனா வித்யாலயா பள்ளியில் தாய்மொழி தின விழா

கடையநல்லூர், பிப். 22: கடையநல்லூர் சாதனா வித்யாலயா பள்ளியில் தாய்மொழி தின விழா கொண்டாடப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் பிப்.21ம் தேதி ‘‘உலக தாய்மொழி நாள்’’ என அறிவிக்கப்பட்டு உலகெங்கும் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உலகின் மூத்த மொழியாகிய நம் தமிழ்மொழியை போற்றிடும் வகையில், கடையநல்லூர் சாதனா வித்யாலயா பள்ளியில் தாய்மொழி தின விழா கொண்டாடப்பட்டது.  பள்ளி தாளாளர் ரமேஷ் தலைமை வகித்தார். முதல்வர் மயில்கண்ணு ரமேஷ் தாய்மொழியான தமிழ்மொழியின் வரலாறு குறித்தும், தலைமை ஆசிரியர் பால்ராஜ் உலகமொழிகள் மற்றும் செம்மொழிகள் குறித்தும் பேசினர். விழாவில் மாணவர்கள் இணைந்து நம் தாய் மொழியான தமிழ்மொழியை தமிழ் என்ற வடிவத்தை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: