ராதாபுரம், பிப். 22: கூடுதாழை புனித தோமையார் ஆலய திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மறையுரை, சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 9ம் திருவிழாவன்று பங்குதந்தையர்கள் லயோலா டிரோஸ், பிரதீப், ஷிபாகர் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. 10ம் திருநாளன்று தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. மாலை நற்கருணை பவனி, மறையுரை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை அன்றனி ஜெகதீசன் தலைமையில் ஆலய நிர்வாக குழுவினர், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.