தென்காசி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

தென்காசி, பிப். 22:  தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தென்காசி வட்டாரத்திற்குட்பட்ட சத்துணவு மைய சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். அலுவலக மேலாளர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.  பயிற்சி முகாமில் தென்காசி வட்டாரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சத்துணவு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் முகம்மது இஸ்மாயில், வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட மேற்பார்வையாளர் லட்சுமி, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பாலசந்தர் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

தென்காசி ஊராட்சி ஒன்றிய சத்துணவு சமையலர்கள் கணபதி, குமாரி, இசக்கியம்மாள், ராமலட்சுமி, மாரியம்மாள், முத்துலெட்சுமி, மோகனகுமாரி, அம்பிகா மற்றும் உஷா, காமாட்சி, பிரின்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: