திருவள்ளூர், பிப் 22: தமிழக அரசின் கால்நடை பரமாரிப்புத் துறையில் காலியாகவுள்ள 1,573 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு, மாவட்டங்கள் வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 34 காலிப் பணியிடங்களுக்கு, மொத்தம் 5,475 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு, கடந்த 3 நாட்களுக்கு முன் நேர்காணல் கடிதம் கிடைத்தது. இந்நிலையில், இன்று (22ம் தேதி) தொடங்கி 25ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. திருவள்ளூர் மாவட்டத்துக்கான நேர்காணல், மாவட்ட கால்நடைத்துறை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.