கும்மிடிப்பூண்டி, பிப்.22: திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று ஜனப்பன்சத்திரம் கூட்டுசாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன் தலைமை தாங்கினார். சோழவரம் ஒன்றிய செயலாளர் நா. செல்வசேகரன் வரவேற்றார். கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், மாநில தகவல் தொழில் நுட்ப அணியின் இணை செயலாளர் சி. எச். சேகர், மாவட்ட நிர்வாகிகள் சந்திரன், கதிரவன், பரிமளம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஜெ.கோவிந்தராசன் ஜெ.மூர்த்தி முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.