பொன்னேரி, பிப். 22. பொன்னேரில் அடுத்த சின்னகாவனம் கிராமத்தில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதில் குளறுபடி நடப்பதாக கூறி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னகாவனம் கிராமத்தில் 700 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு, கடந்த 3 நாட்களாக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கும் நலிந்தோர் காண உதவித்தொகை 2000 ரூபாய் தருவதற்கு பட்டியல் எடுக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 700 குடும்பங்களில் வெறும் 70 குடும்பங்கள் மட்டும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாக ஏழைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது தெரியவந்தது, கிராம மக்கள் அதிகாரிகளிடம் நேற்று விசாரித்தனர். அப்போது, 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான பட்டியல் ஏற்கனவே எடுத்துவிட்டதாகவும், இரண்டாம் பட்டியலில் விடுபட்டவர்கள் மட்டும் எடுப்பதாக கூறியுள்ளனர்.