போளூர் ஒன்றியத்தில் 10 கிராமங்களில் அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்

திருவண்ணாமலை, பிப்.21: போளூர் ஒன்றிய அதிமுக சார்பில் 10 கிராமங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், போளூர் ஒன்றியத்திற்குட்பட்ட வசூர், குருவிமலை, புதுப்பாளையம், திருசூர், காங்கேயனூர், அத்திமுர் உட்பட 10 கிராமங்களில் அதிமுக சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய பொருளாளர் கே.ஜே.கண்ணன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் குருவிமலை அ.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில மகளிரணி துனை செயலாளர் எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன், தலைமை கழக பேச்சாளர்கள் அ.அமர்நாத், ரா.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பேசினர். இதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் எஸ்.கே.ராமமூர்த்தி, கே.ராஜசேகரன், எம்.சின்னதம்பி, ஆர்.சசிக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: