தோகைமலை, பிப். 20: தோகைமலை அருகே தளிஞ்சி மேலப்பட்டியில் தென்னை விவசாயிகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தளிஞ்சி ஊராட்சி மேலப்பட்டியில் புழுதேரியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் தென்னை மரம் ஏறுதல் மற்றும் பூச்சி நோய் கட்டுப்படுத்துதல் குறித்து திறன் வளர்ப்பு பயிற்சி துவங்கியது. ஒரு மாதம் நடைபெறும் இப்பயிற்சியினை நபார்டு வங்கியின் துணை பொது மேலாளர் பரமேஸ்குமார் தலைமையேற்று துவக்கி வைத்தார். வேளாண் உதவி இயக்குனர் பாண்டி, வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.