கரூர், பிப். 20: நமது நாட்டுக்கு மேக் இன் இந்தியா தேவை இல்லை. பை இன் இந்தியா தான் தேவை என்று கரூரில் நடந்த விழாவில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.கரூரில் புதிய சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். விழாவில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியது:கரூர் தொகுதியில் 1989ல் எம்பியானேன். 1996ல் தோல்வி, மீண்டும் 1997ல் வெற்றிபெற்று மத்திய அமைச்சராக இருந்தபோது பஸ் நிலையமும், ரயில் நிலையமும் இணைப்பு சாலையில் இருக்க வேண்டும் என முயற்சி எடுத்தேன். 1999ல் கரூரில் போட்டியிடவில்லை. அதன் பின்னர் தொடர்ந்து இருமுறை எம்பியாக இருக்கிறேன்.திருச்சி- கோவை பசுமை வழிச்சாலை திட்டம் வர இருக்கிறது. இதில் கரூர்- கோவை சாலையானது 200 அடியில் அமையும். நான்கு சர்வீஸ் ரோட்டையும் சேர்த்து 12 டிராக் இருக்கும். கோவைக்கு 2 மணி நேரத்தில் சென்று விடலாம்.