மாநகர கண்டக்டரை வெட்டிக்கொல்ல முயன்ற வழக்கு 4 கல்லூரி மாணவர்கள் கைது: 2 பைக்குகள் பறிமுதல்

அம்பத்தூர், பிப்.19: மாநகர பஸ் டிரைவரை வெட்டிக்கொல்ல முயன்ற வழக்கில் கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, அண்ணாசதுக்கத்தில்  இருந்து ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதிக்கு மாநகரப் பேருந்து (தடம் எண் 27 எச்) கடந்த 13ம் தேதி மாலை புறப்பட்டது. இந்த பேருந்தை முருகன் (42) என்ற டிரைவர் ஓட்டி வந்தார்.  கண்டக்டராக பால்வர்ணன் (51) பணியாற்றினார்.இந்த பேருந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை, மண்ணூர்பேட்டை, சி.டி.எச் சாலையில் வந்தது. அந்த பேருந்தை பின் தொடர்ந்து 2 பைக்கில் வந்த நான்கு இளைஞர்கள், பஸ்சை நிறுத்தும்படி கண்டக்டரிடம் சத்தம் போட்டு தகராறு  செய்துள்ளனர். அவர் பேருந்தை நிறுத்துவதற்கு ‘‘விசில்’’ அடிக்காமல் சென்று உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த, அவர்களில் ஒருவன் கையில் வைத்திருந்த ஒன்றரை அடி நீளமுள்ள கத்தியை எடுத்து பால்வர்ணன்  பக்கவாட்டில் இருந்த கண்ணாடியை வெட்டி உள்ளனர். இதில், கண்ணாடி உடைந்து கத்தி பேருந்துக்குள் விழுந்தது. இச்சம்பவத்தில் கண்டக்டர் பால்வர்ணனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இதனையடுத்து, டிரைவர் முருகன் பேருந்தை ஓட்டி கொண்டு அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்றார். இது குறித்து, கண்டக்டர் பால்வர்ணன் பேருந்தில் விழுந்த கத்தியுடன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர்  விஜயராகவன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி னர்.

விசாரணையில் அந்த பேருந்தில் மாநில கல்லூரி மாணவர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் பஸ்ஸை வழிமறித்து தகராறு செய்ய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பின்தொடர்து பைக்கில் வந்துள்ளனர். டிரைவர் பேருந்தை  நிறுத்தாததால் கண்டக்டரை கத்தியால் வெட்ட முயன்றது தெரியவந்தது.தகாறில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ஆவடி அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்த சிவபாரதி (20), சரவணன் (20), கோபி (19), திருவள்ளூரை சேர்ந்த யுவராஜ் (20) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த 4 பேரையும் நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: