அண்ணாநகர் பகுதியில் அடிப்படை வசதி இன்றி பொதுமக்கள் அவதி

பந்தலூர், பிப்.15 :பந்தலூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் நடைபாதை, தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் நீண்ட நாட்களாக தவித்து வருகின்றனர்.

 இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: