ஊட்டி, பிப். 15: ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கோத்தகிரி, தும்மனட்டி, கப்பச்சி, கட்டபெட்டு, மைனலை, பேரார் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்ேவறு ேதவைகளுக்காக நாள் தோறும் ஊட்டி வந்து செல்கின்றனர். இவர்கள், மீண்டும் தங்களது கிராமங்களுக்கு செல்வதற்கு, மாலை நேரங்களில் சேரிங்கிராஸ் பகுதியில் பஸ்சிற்காக வெகு நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளது. தற்போது இப்பகுதியில் நிழற்குடை மற்றும் பஸ் நிறுத்தம் இல்லாத நிலையில் பயணிகள் சாலையோரங்களிலேயே வெகு நேரம் காத்து நிற்க வேண்டிய அவலம் நீடிக்கிறது.