குளித்தலை, பிப். 15: கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம், மணத்தட்டை ஊராட்சி எழுநூற்றுமங்கலத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ ராமர் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சந்திரன், பொதுக்குழு சரவணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ரகுபதி அனைவரையும் வரவேற்றார்.இக்கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் மணத்தட்டை ஊராட்சி எழுநூற்றுமங்கலம் கிராமம் வழியாக தினந்தோறும் காலை, மாலை இரு வேளைகள் மட்டும் பேருந்து வசதி உள்ளது. இதனால் மற்ற நேரங்களில் 2 கிமீ தூரம் நடந்து சென்று தான் பேருந்து ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் எங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தவர்கள் தற்போது உதவித்தொகை கிடைக்காததால் பெரும் அவதியடைந்து வருகின்றனர். அதனால் உதவித்தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.