கட்டிட தொழிலாளியை தாக்கியவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை செய்யாறு நீதிமன்றம் உத்தரவு

செய்யாறு, பிப்.15: செய்யாறில் முன்விரோத தகராறில் கட்டிட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவருக்கு ஒரு ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனையும், ஒரு ஆயிரம் அபராதமும் விதித்து செய்யாறு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.செய்யாறு கிடங்கு தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன்(38). இவர் கட்டிட மேஸ்திரி தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான பிரகாஷ்(36). இவர்கள் இருவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் பிரகாஷ், ஆனந்தை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.இதுதொடர்பாக, செய்யாறு போலீசார் வழக்குப்பதிந்து பிரகாசை கைது செய்தார். இதுதொடர்பான வழக்கு செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்நிலையில், இந்த வழக்கை நேற்று மாஜிஸ்திரேட் சுந்தரபாண்டியன் விசாரித்து பிரகாசுக்கு ஒரு வருடம், 3 மாதம் சிறை தண்டனையும், ₹1000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Stories: